பேருந்து ஓட்டும்போதே ஏற்பட்ட வலிப்பு - உயிரை துச்சமென நினைத்து பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

x

நெல்லையில் பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட வலிப்பை பொருட்படுத்தாது பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் கணேசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதை பொருட்படுத்தாத ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரத்தில் பத்திரமாக நிறுத்திவிட்டு அங்கேயே மயங்கியுள்ளார். அவரை மீட்ட பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநரின் செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்