கோவிலில் மூலவர் சிலை அமைப்பதில் தகராறு... தனியாக மூலவர் சிலை தயார் செய்த சிலரால் பரபரப்பு

x

எடப்பாடி அருகே வேட்டுவபட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதில், கோவிலுனுள் மூலவர் சிலை அமைப்பதற்காக ஊர் மக்கள் அனைவரிடத்திலும் பணம் வசூலித்து வந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த சிலர் மட்டும் தனியாக மூலவர் சிலை தயார் செய்து கோவிலுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தகராறில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்