"சர்ச்சை வீடியோ.." கனல் கண்ணனுக்கு ஜாமின் - ஆனால் ஒரு கண்டிஷன்...!

x

சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கனல் கண்ணன்

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவ மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில், ட்விட்டர் பக்கத்தில் சர்ச்க்குரிய வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக, திமுக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், கடந்த 10ம் தேதி கனல் கண்ணனை கைது செய்தனர். இதையடுத்து, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கனல் கண்ணன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், காலையும், மாலையும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனைத்தொடர்ந்து, சிறையிலிருந்து கனல் கண்ணன் விடுவிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்