சர்ச்சையான பேர்ஸ்டோ அவுட் - கொந்தளிக்கும் ரசிகர்கள்

x

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ அவுட் ஆன விதம் பேசுபொருளாகி உள்ளது. கிரீன் வீசிய பந்தை லீவ் செய்த பேர்ஸ்டோ, கிரீஸில் இருப்பதாக சுட்டிக்காட்டிய பிறகு கிரீஸை விட்டு வெளியேறினார். ஆஸ்திரேலிய கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்ப்பில் பந்தை எறிந்து அவுட் கோரினார். கிரீஸில் அப்போது பேர்ஸ்டோ இல்லாத நிலையில், ஐசிசி விதிகளின்படி பேர்ஸ்டோவிற்கு 3ம் நடுவர் அவுட் கொடுத்தார். எனினும் பேர்ஸ்டோ கிரீஸில் இருப்பதை சுட்டிக்காட்டிய பின்னரே வெளியேறினார் என்றும், அவருக்கு அவுட் வழங்கி இருக்கக் கூடாது என்றும் ஒருதரப்பு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்