மாலையில் தொடர் மின்வெட்டு.. சாலையில் இறங்கிய மக்கள் - சிவகங்கையில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தொடர்மின் வெட்டு நிகழ்வதாக கூறி, சாலையின் குறுக்கே கயிறு கட்டி பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள சந்திவீரன் கூடம் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களாக மாலை நேரத்தில் தொடர் மின்வெட்டு நிகழ்வதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்....


Next Story

மேலும் செய்திகள்