சென்னையில் தொடரும் மழை - மழை நீரோடு வீடுகளில் புகுந்த பாம்பு

x

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக எம் .எம் .டி.ஏ கல்யாணசுந்தரம் தெரு பகுதியை கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தண்ணீரில் விஷப்பூச்சிகளும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேபோல் மணலி, மாத்தூர், வட பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்