தொடர் தீபாவளி விடுமுறை - ஸ்தம்பித்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலை

x

தொடர் தீபாவளி விடுமுறை - ஸ்தம்பித்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலை

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை பொதுமக்கள் புறப்பட்டுச் சென்றனர். சென்னை தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் நெரிசலுடன் ஏறிச் சென்றனர். தாம்பரம் சானடோரியம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.


Next Story

மேலும் செய்திகள்