திருமண மண்டபத்தின் கட்டுமானம். திடீரென இடிந்து விழுந்த சுவர் வறுமையை போக்க பணிக்கு வந்தவர்களின் கதி

x

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே, தனியார் மண்டப கட்டுமான பணியின்போது சுற்றுசுவர் இடிந்து தொழிலாளிகள் இருவர் உயிரிழந்தனர். சோளிங்கரில், தனியார் திருமண மண்டப கட்டுமான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்ததால், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வேலு மற்றும் விஸ்வநாதன் ஆகிய 2 தொழிலாளிகள், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்