நடிகர் விஷாலுக்கு ஆறுதல்... லைகாவுக்கு சோதனை மேல் சோதனை..! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

விஷால் பிலிம் பேக்டரி தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது. இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி, படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனர். இந்த உத்தரவை விஷால் மீறியுள்ளதாக லைகா நிறுவனம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.செளந்தர், விஷால் தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தார். பிரதான வழக்கில் வரும் 26ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்