விராட் கோலி - கம்பீர் வாக்குவாதம் ..."தற்காலிக தடை விதிக்கப்பட்டால்..." - கண்டனம் தெரிவித்த முன்னாள் இந்திய வீரர்

x

விராட் கோலியும் கம்பீரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சரியானது அல்ல என கூறியுள்ளார். விராட் கோலியும், கம்பீரும் நாட்டின் அடையாளங்கள் என்ற ஷேவாக், அவர்கள் செய்யும் விஷயங்களை நாமும் செய்யலாம் என, இருவரையும் பின்பற்றும் கோடிக்கணக்கான சிறார்கள் நினைக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லை மீறும் வீரர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டால், இதுபோன்ற சம்பவங்கள் குறையும் அல்லது நடைபெறாது எனவும் சேவாக் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்