பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் இசை நிகழ்ச்சி - மெய்மறக்கச் செய்த பக்தி பாடல்கள்

x

டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் தெய்வப்பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

போயஸ் தோட்டத்தில் உள்ள டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்திற்கு சென்ற சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினர் "திரை இசையில் தெய்வப்பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியை நடத்தினர். திரைப்பட பாடகர்கள் வினையா, சுசித்ரா, சாய் விக்னேஷ், சந்தோஷ் சுப்பிரமணியன், மற்றும் கீ போர்டு பிரான்சிஸ் சேவியர், வயலின் ரங்கப்பிரியா, புல்லாங்குழல் வெங்கட நாராயணன், தபேலா வெங்கட் ஆகிய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மண்ணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், திருப்பரம் குன்றத்தில் நீ சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு பக்தி பாடல்கள் பாடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்