பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ரூ.850 கோடி செலவில் கட்டப்பட்ட வளாகத்துக்கு வந்த சோதனை

x

உஜ்ஜயினி மகாகாளேஸ்வர் கோயில் வளாகம், பலத்த காற்றினால் கடுமையாக சேதமடைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுமார் 850 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகாகாளர் வளாகத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு திறந்து வைத்தார். இந்தநிலையில் நேற்று மதியம் வீசிய பலத்த காற்றினால் மகாகாளர் வளாகம் கடும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக அவ்வளாகத்தில் இருந்த சப்த ரிஷிகளின் சிலைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சில சிலைகள் கீழே கவிழ்ந்துள்ளன. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்