போலி நிறுவனங்களை பதிவு செய்ததாக புகார் - தனியார் அலுவலகத்தில் திடீர் சோதனை

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் தணிக்கை அலுவலகத்தில், போலி ஆவணங்கள் மூலம் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை பதிவு செய்தது தெரியவந்துள்ளது. இந்த போலி நிறுவனங்களில் ஆருத்ரா கோல்ட் நிறுவனமும் உள்ளடங்கியது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த தணிக்கை அலுவலகத்திலும், சாட்டர்டு அக்கவுன்டண்ட் கிருத்திகா என்பவருடைய வீட்டிலும், கம்பெனி பதிவாளர் அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com