பாஜகவினர் சிறுவன் மீது கற்களை வீசி தாக்கியதாக புகார் - ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி

x

குஜராத்தில் ஆம் ஆத்மி கூட்டத்தின் போது பாஜகவினர் கல்வீசி தாக்கியதில், சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, சூரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சிலர் கூட்டத்தினர் மீது கற்கள் வீசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சிறுவனின் தலையில் படுகாயமடைந்து ரத்தம் வெளியேறியதால், அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி, பாஜகவின் அடியாட்கள் சிறுவன் மீது கற்களை வீசியதாக குற்றம் சாட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்