தனியார் பள்ளி திறக்கப்பட்டு பாடம் நடத்துவதாக புகார்...கல்வித்துறை அதிரடி ஆய்வு

x

புதுச்சேரியில் தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக வந்த புகாரை அடுத்து,அங்கு கல்வித்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். வெயிலின் தாக்கத்தால், வரும் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நைனார்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக புகார் வந்தது. இதை அடுத்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அந்த பள்ளியில் ஆய்வு செய்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்