பட்டாசு வெடித்து.. தாய் மாமன் சீர் வரிசை - வன்னியர் தெருவில் சிகரெட் பிடித்த தம்பி" - பட்டியல் இனத்தவரை காலில் விழ வைத்த கொடூரம்.. அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

x

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அன்பரசன், இதுகுறித்து புகார் தெரிவித்திருந்தார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்ற போது, ஆதிச்சனநல்லூர் கிராமத்தில் இருந்து தாய் மாமன் சீர் வரிசை, வன்னியர் தெரு வழியாக, பட்டாசு வெடித்துக் கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். தமது தம்பி திருநாவுக்கரசு, வன்னியர் தெருவில் உள்ள பெட்டி கடையில் சிகரெட் வாங்கி புகை பிடித்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் கிராம முக்கியஸ்தர்கள் அறிவுறுத்தலின் பேரில், ஊர் மக்கள் முன் திருநாவுக்கரசு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். அன்பரசன் அரியலூர் பாஜக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ள நிலையில், இந்த செயல் தீண்டாமைக்குற்றம் என பதிவிட்டு, குடியரசுத் தலைவர், ஆளுநர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 14 அரசு அதிகாரிகளுக்கு, பதிவுத்தபாலில் புகார் மனு அனுப்பியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் என்பவரைக் கைது செய்த போலீஸ், தலைமறைவான திமுக ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்