நகைக் கடை மீது மோசடி புகார்... ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக பொதுமக்கள் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

x

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நகை கடை ஒன்று,10 கோடி ரூபாய்க்கும் மேல் பொதுமக்களிடம் ஏமாற்றி விட்டு கடையை பூட்டிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

அங்குள்ள கண்டியூர் சாலையில் செயல்பட்டு வரும் நகைக் கடை ஒன்று, கடந்த 4 நாட்களாக பூட்டி கிடந்த நிலையில், அதில் சீட்டு போட்டவர்களும், நகையை அடகு வைத்தவர்களும் கடை முன் சாலை மறியல் மேற்கொண்டனர்.

தகலின் பேரில் அங்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்