வாய் பேச முடியாத சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக புகார்.. சென்னையில் பாஜக பெண் நிர்வாகி கைது

x


பேச்சுக் குறைபாடு உடைய 7 வயது சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக, தாய் அளித்த புகாரின் பேரில், பா.ஜ.க நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாஜக மத்திய சென்னை வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் மீனாட்சி என்பவர், பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பிளே ஸ்கூலில், வழக்கறிஞர் சரண்யா என்பவர், பேச்சு குறைபாடுடைய தனது 7 வயது மகனை சேர்த்துள்ளார். இதனிடையே, சிறுவனின் உடலில் காயமடைந்த நிலையில் தழும்பு ஒன்று உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சரண்யா, இதுதொடர்பாக, மீனாட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சரண்யாவை மீனாட்சி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மகனை அடித்து துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் சரண்யா புகார் அளித்த நிலையில், விசாரணைக்குப் பின், பாஜக நிர்வாகி மீனாட்சியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்