அனுமதியின்றி மண் அள்ளுவதாக புகார்... திமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம்

x

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே, திமுகவினர் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் கண்மாய் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் போக்கு உருவானது.

தகவல் அறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்