வியாபாரிகளிடையே போட்டி, பொறாமை.. இருவருக்கும் நடந்த சோகம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

x

சென்னை திருவான்மியூரில் பூ வியாபாரம் செய்யும் சுப்புரா மற்றும் லட்சுமி இடையே வியாபார ரீதியாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் கடந்த 2017-ஆம் ஆண்டு லட்சுமியின் உறவினர்களான முரளி, யுவராஜ் ஆகியோர் சுப்புராவை கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர்.

இந்த கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் குறித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இறுதியாக இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்