"எங்களை எதிர்த்த கம்யூனிஸ்ட்கள்..இப்போ பிளாஸ்திரி ஓட்டி மவுனம்" | EPS |Erode | Communist

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்..இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, இடைத்தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்..


Next Story

மேலும் செய்திகள்