விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன்

x

காரைக்கால் அருகே 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். திருநள்ளாறு பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம், அந்த வழியே சென்ற சக்திவேல் என்ற கல்லூரி மாணவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர் சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்