கல்லூரி மாணவி சத்யா கொல்லப்பட்ட சம்பவம் "சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்" - சிபிசிஐடி அறிவிப்பு

x

கல்லூரி மாணவி சத்யா கொல்லப்பட்ட சம்பவம் "சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்" - சிபிசிஐடி அறிவிப்பு

கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா தன் முன்னாள் காதலன் சதீஷால் தள்ளி விடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் தங்களை அணுகலாம் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை வழக்கு தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுப்பவர்களின் அடையாளங்கள், தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்