விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி...திருவண்ணாமலையில் பரபரப்பு...!

விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி...திருவண்ணாமலையில் பரபரப்பு...!
Published on

திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், பெங்களூருவைச் சேர்ந்த கோதை லட்சுமி என்ற மாணவி நான்காம் ஆண்டு பி. எஸ்.சி நர்சிங் பயின்று வந்தார். இந்நிலையில், கல்லூரி விடுதியில் மாணவி கோதை லட்சுமி, உயிரிழந்த நிலையில் தூக்கில் சடலமாக இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகளும், கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com