கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

x

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை, திருச்சி முதுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே பணி நிமித்தமாக வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என தெரிகிறது. புகாரின் பேரில் மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில், அவரை முதுவத்தூர் கிராமத்தில் அச்சிறுவனின் வீட்டில் மீட்டனர். விசாரணையில், மாணவியை சிறுவன், பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை சிறார் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்