'வாரிசு', 'துணிவு' படங்களை வெளியிட்ட திரையரங்குகளை மூட ஆட்சியர் உத்தரவு

x

பொங்கல் பண்டிகை தினங்களில் திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகளை வெளியிட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 திரையரங்குகள் தடையை மீறி, 'வாரிசு', 'துணிவு' ஆகிய படங்களின் சிறப்பு காட்சியை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்காத நிலையில், சம்பந்தப்பட்ட திரையரங்குகளை 3 நாட்கள் மூட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு சென்ற தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை வெளியேற்றி திரையரங்குகளை மூடினர். இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்