இடிந்து விழுந்த கிணற்றின் சுவர் - பரபரப்பு காட்சிகள்

x

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில், கனமழை காரணமாக கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. முடிச்சூர் கங்கா நகர் 2-வது பிரதான சாலையில் உள்ள தனியார் கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. ஊராட்சி அதிகாரிகள், தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து முடிச்சூர் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கிணற்றுப் பகுதியில் சவுக்கு கொம்புகளை நட்டுவைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். மேலும், பாதுகாப்பற்ற சூழலில் கிணறு இருப்பதால், அதன் உரிமையாளரிடம் கிணற்றை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், கிணற்றை மூடவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்