மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இரட்டைச் சதம் விளாசிய...

மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இரட்டைச் சதம் விளாசிய...
Published on

மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 92 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டிரெண்ட் பிரிட்ஜ் நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 473 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 463 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது. தொடக்க வீராங்கனை டாமி பெமோன்ட் இரட்டை சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்துள்ளது. லிட்ச்ஃபீல்டு 41 ரன்களுடனும், பெத் மூனி 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com