கோவையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... காதலிக்க மறுத்ததால் இளைஞர் செய்த செயல் - துடிதுடித்த பெண் - பரபரப்பு சம்பவம்

x
  • கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • கோவை மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
  • சில மாதங்களுக்கு முன்பு படிப்பை நிறுத்திய அப்பெண் சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டிராவல்ஸில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
  • இந்நிலையில், அப்பெண்ணுடன் கல்லூரியில் படித்த ஸ்ரீ ராம் என்ற இளைஞர், அப்பெண் பணிபுரியும் டிராவல்ஸுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
  • இதற்கு அப்பெண் மறுக்கவே, தான் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
  • இதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஸ்ரீராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்