சாலையோரம் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி..! கொலை செய்யப்பட்டாரா..? - கோவையில் அதிர்ச்சி

x
  • கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தில சஞ்சய் சவுத்ரி என்பவர் மர்மமான முறையில் ரத்தகாயங்களுடன் சாலையோரம் இறந்து கிடந்தார்.
  • பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த 2 வருடங்களாக பெட்டதாபுரத்தில் அறை எடுத்து தங்கி அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார்.
  • இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • சஞ்சய் சவுத்ரி கொலை செய்யப்பட்டாரா, கொன்றது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்