மொபைல் கடைகளில் தொடர் கைவரிசை - பலே கொள்ளையனின் பகீர் சிசிடிவி காட்சி

x

கோவை சுந்தராபுரத்தில் உள்ள மொபைல்கடையில் நள்ளிரவில் மர்ம நபர் செல்போனை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நள்ளிரவில் மொபைல் கடையில் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், கடையில் இருக்கக்கூடிய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய மொபைல்களை திருடியுள்ளார்.

இது குறித்து கடையின் உரிமையாளர் புண்ணியக்கோடி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், ஒரே நாளில் அந்த பகுதியில் உள்ள மூன்று கடையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்