சிக்கலில் சிக்கிய ரீல்ஸ் தமன்னா.. அம்பலமான அதிர்ச்சி தகவல் - தேடி போய் தட்டி தூக்கிய போலீஸ்

x
  • இன்ஸ்டாகிராமில் பட்டாகத்திகளுடன் ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய இளம் பெண்ணை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
  • கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவமும், நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற கொலை சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
  • இதையடுத்து, மாநகரம் முழுவதும் உள்ள ரவுடிகளையும், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடுபவர்களையும் போலீசார் தீவிரமாக நோட்டமிட்டு வந்தனர்.
  • இதனிடையே, இன்ஸ்டாகிராமில் "Friends call me thamanna" என்ற பெயரில் கையில் பட்டாகத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் இளம் பெண் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்டிருந்தார்.
  • இந்த ரீல்ஸ் வைரலாகி பரபரப்பான நிலையில், பதிவிட்ட இளம் பெண் முன்னாதாக குறிப்பிட்ட இரு கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வது தெரியவந்துள்ளது.
  • இதனிடையே, வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய ரீல்ஸ் குறித்து இளம் பெண் விளக்கம் தெரிவித்திருந்த நிலையில், தனிப்படை போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தேடி வந்தனர்.
  • இந்நிலையில், பெண்ணை கைது செய்துள்ள போலீசார், காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்