செல்போன் வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு... நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்

x
  • கோவையில், தகராறின்போது நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கோவை வடவள்ளி அடுத்த வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகன் ராஜ் மற்றும் நம்பியழகம்பாளையம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ், ஆகிய இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு, செல்போன் ஒன்று வாங்கி தருமாறு கூறி, மதன்ராஜிடம் ஜெகன்ராஜ் பணம் கொடுத்துள்ளார்.
  • ஆனால் பணத்தை வாங்கிய மதன்ராஜ், செல்போன் வாங்கிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மதன்ராஜின் வீட்டிற்கு சென்ற ஜெகன்ராஜ், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
  • அப்போது ஆத்திரமடைந்த மதன்ராஜ், ஜெகன்ராஜை கத்தியால் தாக்கியுள்ளார்.
  • இதில், நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • பின்னர், ஜெகன்ராஜின் உடலை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்ற மதன்ராஜ், வீரகேரளம் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானம் அருகில் வீசியுள்ளார்.
  • இந்த விவகாரம் ஜெகன்ராஜின் உறவினர்களுக்கு தெரிய வர, புகாரின் பேரில் மதன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்