கோவை கார் வெடிப்பு சம்பவம்-மதகுருவிடம் 3 மணிநேரம் விசாரணை-நெல்லையில் லேப்டாப் பறிமுதல்

x

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இஸ்லாமிய பிரசார பேரவை மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் மண்பையிடம் நெல்லை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து நெல்லை மாநகரம் மேலப்பாளையம் ஏகே கார்டன் பகுதியில் வசித்து வரும் முகமது உசேன் மண்பை என்பவரிடம், ஆய்வாளர் ரவீந்திரன் ஜேம்சன் ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் முகமது உசைன் மண்பை வீட்டிலிருந்து, லேப்டாப் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்