கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு ...கைதான 6 பேரை மீண்டும் காவலில் எடுக்க என்ஐஏ திட்டம்

x

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதான 6 பேரையும் கடந்த 17-ஆம் தேதி முதல், 6 நாட்கள் என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து, 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்