தக்காளி அப்படீன்னா... தேங்காய் இப்படி "முதலே நிக்கல என்ன செய்வோம் " ..| Coconut| Thanthi

x

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில், விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தேங்காய் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை பகுதியில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தேங்காய் 11 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ஒரு தேங்காய் 7 முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுவதால், பராமரிப்பு செலவு மற்றும் வெட்டுக்கூலிக்கு போதவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தேங்காய்க்கு அரசு நிலையான விலையை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்