ரயில்வே கேண்டீனில் வாங்கிய இட்லியில் கரப்பான்பூச்சி - பயணிகள் பெரும் அதிர்ச்சி - வீடியோ வெளியிட்டு குமுறல்

x

டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று போபால் பகுதியை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீனில் பயணி ஒருவர், தலா 50 ரூபாய் கொடுத்து 3 இட்லி பொட்டலங்களை வாங்கியுள்ளார். தனது மகளின் பார்சலை பிரித்து பார்த்தபோது இட்லியில் கரப்பான்பூச்சி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பயணி, இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் மேலாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்