தடையை மீறி சேவல் சண்டை..! ஆயிரம் கோடி வரை நடக்கும் பண பரிவர்த்தனை..

x

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மற்றும் மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் மகர சங்கராந்தியை ஒட்டி, சேவல்சண்டை நடத்தப்பட்டது.

பீமவரத்தில், துவங்கியுள்ள சேவல் சண்டை போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக, 60 ஆயிரம், 40 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

போலீசார் தடை விதித்திருந்தாலும் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் சுமார் ஆயிரம் கோடி வரை பண பரிவர்த்தனை நடக்கும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்