பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இளைஞர்கள்.. துரத்தி சென்ற போலீசார் மீது மது பாட்டிலால் தாக்குதல்

x

கேரள மாநிலம் கொச்சியில், . சளிக்கவட்டம் பகுதியில் சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதையறிந்த போலீசார், இருவரையும் பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். அப்போது, இளைஞர்கள் இருவரும் மது பாட்டிலால் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த போதிலும் இருவரையும் பிடித்த போலீசார், பாலாரிவட்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த சாய் ராஜ், பால் கண்ணன் என்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்