பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் | PM Modi | MKStalin | Letter | Fishermen | ThanthiTV

x
  • நாகை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 16 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் 12ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்த‌தை முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது ஒரு மாத‌த்திற்குள் இது மூன்றாவது சம்பவம் என கூறியுள்ள முதலமைச்சர், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைந்து, அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.
  • வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இருப்பினும் இதுபோன்ற சம்பவம் நடப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
  • இதனால், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
  • மேலும், 16 மீனவர்களையும், 102 படகுகளையும் விடுவிக்க தேவையான தூத‌ரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்