பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம்

x
  • பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
  • அந்த கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 பேர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேர் என 16 இந்திய மீனவர்கள், தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர் என்றும், 23-ஆம் தேதி, பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மீனவர்களையும், அவர்களின் படகையும் டியாகோ கார்சியோ அதிகாரிகள் சிறைப்பிடித்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
  • எனவே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தூதரக வழிமுறைகள் மூலமாக இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்