"THANKS UNCLE"... குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய முதல்வர்

"THANKS UNCLE"... குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய முதல்வர்
Published on

ஆய்வுக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர்

தஞ்சையில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் ஆலக்குடி அருகே உள்ள முதலைமுத்து வாரி பகுதியில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பிறகு விண்ணமங்கலம் சென்றார். அப்போது செல்லும் வழியில் பூதலூர் நான்கு ரோடு அருகே ஏராளமான பொதுமக்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு குழந்தைகளுடன் ஒருவர் நிற்பதை பார்த்த முதல்வர் வாகனம் மெதுவாக நின்றது. இதனையடுத்து அவரிடம் இருந்து முதலமைச்சர் மனுக்களை பெற்று கொண்டார். பிறகு இரு சிறுமிகளுக்கும் கை கொடுத்து, சாக்லேட் வழங்கினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com