தேர்தல் ஆணையர் தேர்வு.. உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

x

தலைமை தேர்தல் ஆணையர்,மற்றும் தேர்தல் ஆணையர் நியமனத்தி​ல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வரவேற்பதாக,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், துடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது எனவும் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், சரியான நேரத்தில் தலையிட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்