மரத்தடியில் வகுப்பு, வெயிலில் வேதனையோடு கல்வி பயிலும் அவலம் - தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அடிப்படை வசதிகள் கூட இன்றி அரசுப்பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்... 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக வானமாதேவி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஒரு கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட நிலையில், போதிய இடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியிலும், இ சேவை மைய கட்டடத்திலும், வெயிலிலும் அமர்ந்து வேதனையோடு கல்வி பயில்கின்றனர். மேலும் கழிவறை வசதி கூட இல்லாமல் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்