9ம் வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜா முகமது என்பவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி, பிரபாகர், ராஜா முகமது மற்றும் உடந்தையாக இருந்த உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்