பயங்கர ஆயுதங்களுடன் மோதல்..தனிநபராய் தடுத்து நிறுத்திய காவலர்..பாராட்டிய மாவட்ட எஸ்பி

x

சங்கராபுரம் அடுத்த ராவுத்தநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்தும் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவில் ஊரட்சி மன்ற தலைவரின் கணவர் கதிரவனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மாயவன் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் பழனி முத்து இரு தரப்பினரையும் சமாளித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து தனி நபராக மோதலை தடுத்து நிறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்