கார் டிரைவர் அடித்து கொலை.. நடுவழியில் தவித்த சுற்றுலா பயணிகள்..போலீஸ் சமாதானம் செய்தும் நடந்த கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் டேக்சி டிரைவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சண்முகராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த நிலையில், கார் பார்க்கிங்கில் சக டிரைவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை போலீசார் சமாதானம் செய்து வைத்த நிலையிலும், தகராறு முற்றவே சண்முகராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com