"ஏய் நில்லுங்கப்பா.." தடுத்த அதிகாரிகள் - போலீசார், மாணவர்கள் இடையே பயங்கர தள்ளுமுள்ளு

x

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இந்திய மாணவர் சங்கத்தலைவர் அவமதிக்கப்பட்டதாக கூறி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் அரவிந்த்சாமி, பட்டம் பெற வந்தபோது, கருப்புச்சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் வெளியேற்றினர். இதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர், தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்