புகார் கொடுக்க வந்த இடத்தில் மோதல்...களேபரமான காவல் நிலையம்..தடுக்க முடியாமல் தவித்த போலீசார்

x

சேலம் அருகே, காவல்நிலையம் முன்பே, இருதரப்பினர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள தேநீர் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, சக்திவேல் என்பவர் தரப்பிற்கும், நவீன்குமார் என்பவர் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவான நிலையில், இதுதொடர்பாக சக்திவேல் தரப்பினர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள், காவல் நிலையத்திற்கு வந்து தங்களது சார்பில் புகார் அளித்தனர். பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்