பெட்டி கடையில் மோதல்.. கொத்தனாரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு ஜீவா நகர் பெட்டிக்கடையில் கனகராஜ் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த பர்மா காலனியை சேர்ந்த துரைமுருகனுக்கும், கனகராஜ் தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த துரைமுருகன், ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கனகராஜை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கனகராஜ், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக துரைமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்